search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ."

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • ஆரல்வாய்மொழியில் 1965-ம் ஆண்டு அரசின் மூலம் கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பி னர் தள வாய்சுந்தரம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆரல்வாய்மொழியில் 1965-ம் ஆண்டு அரசின் மூலம் கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது. இந்த நூற்பாலையில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழி லாளர்கள் பணிபுரிந்துவந்த னர். 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 12 ஆயிரத்து 500 கதிர்களாக இயங்கி வந்த யூனிட்டை, 25 ஆயிரம் கதிர்களாக உயர்த்தி, கூட்டுறவு நூற்பாலைக்கு நேரடியாக வந்து அதனை தொடங்கி வைத்தார்.

    இதனால் கூட்டுறவு நூற்பாலை லாபகரமாக இயங்கி வந் தது. தொழிலாளர்களுக்கு 32 சதவீத போனசும் வழங் கப்பட்டது. 2013-ம் ஆண்டு முதல்வராக இருந்தஜெயல லிதா பழைய இயந்திரங் களை அகற்றி, நவீன மய மான புதிய எந்திரங்கள் அமைப்பதற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்தார். இப்ப ணிகள் நிறைவுற்று நவீன மயமாக்கப்பட்ட ஆலை யினை 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் கானொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக இந்த 36 தினக்கூலி தொழி லாளர்களுக்கும் பணி வழங்க நிர்வாகம் மறுத்து வருகிறது. மீதமுள்ள 197 தினக்கூலி தொழிலாளர் களுக்கும் வாரம் இரு நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, தற்போது தினக்கூலி தொழிலாளர்க ளாகபணிபுரியும் 233 தொழி லாளர்களுக்கு, முறையாக பணி வழங்காமல் கூட்டு றவு நூற்பாலை நிர்வாகம் வெளிமாநிலத்தை சார்ந்த 20 தொழிலா ளர்களை ஒப் பந்தஅடிப்ப டையில்நேற்று பணியமர்த்தி உள்ளது. இச் செயல் கண்டிக்கத்தக்கது. வெளி மாநிலத்திலிருந்து ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களை திரும்ப பெற்று, ஏற்கனவே பணிபு ரிந்து வந்த தமிழக தொழி லாளர்களுக்கு உடனடியாக மீண்டும் வேலை வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • யானைகள் விளை நிலங்களில் வராமல் இருப்பதற்கு அகழிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
    • யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பூதப்பாண்டி அருகே உள்ள மலையடிவார பகுதிகளில் யானைகள் போன்ற வனவிலங்குகள் ஆண்டு தோறும் விளைநிலங்களில் புகுந்து பயிர்கள், வாைழ மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஒரு சில நாட்களுக்கு முன்பாக பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி, உடையார்கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவரது தோட்டத்தில் யானைக்கூட்டம் புகுந்து சுமார் 1000 வாழைகளை பிடுங்கி நாசப்படுத்தி உள்ளது. மேலும் அருகில் உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து 18 தென்னை மரங்களையும் நாசப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற யானைகளின் அட்டகாசங்கள் தொடர்ந்து வருகிறது.

    எனவே வனத்துறையினர் தனிக்கவனம் செலுத்தி யானைகள் விளை நிலங்களில் வராமல் இருப்பதற்கு அகழிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்தால் அதனை விரட்டுவதற்கு தேவையான அனைத்து உத்திகளையும் வனத்துறையினர் கையாள வேண்டும். தற்போது யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு 16321 பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டு பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.

    கன்னியாகுமரி:


    மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குமரி மாவட்டம் வந்தார். மார்த்தாண்டம் சுவாமியார் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


    பின்னர் நாகர்கோவில் அருகே கீழ குஞ்சன்விளை யில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து வடசேரியில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். பாரதிய ஜனதா மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கன்னியாகுமரி யில் நடந்த 75-வது சுதந்திர தினவிழா புகைப்படக்கண்காட் சியிலும் கலந்து கொண்டார். மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்த ரம் எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-


    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் கோயம்புத்தூருக்கு 16321 எண்ணுள்ள பாசஞ்சர் ரெயில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு தோவாளை, ஆரல்வாய் மொழி ரெயில் நிலையங் களில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வள்ளியூர், திருநெல்வேலி, மதுரை வழி யாக கோயம்புத்தூருக்கு இரவு 7 மணிக்கு சென்ற டைந்து வருகிறது.

    கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் விரைவு ரெயில் வண்டிக ளுக்குரிய எந்த வசதிகளும், பயணிகளுக்கு செய்யாத நிலையே காணப்படுகிறது. பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.


    மேலும் ஏற்கனவே நின்று சென்ற தோவாளை, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிற்காமல் சென்று வருகிறது. இதனால் இப்ப குதியிலிருந்தும், சுற்று வட்டார கிராமங்க ளிலிருந்தும் திருநெல்வேலி, கோவில் பட்டி பகுதிகளுக்கு அரசு பணி மற்றும் தனியார் பணிக்கு செல்பவர்கள், உயர்கல்வி படிக்க கல்லூரி செல்லும் மாணவர்கள் பிற தொழில் மற்றும் வியாபாரத் திற்கு செல்பவர்கள், திருக் கோவில்களுக்கு செல்பவர் கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மறுமார்க்கமாக கோவை யிலிருந்து 16322 எண்ணுள்ள ரெயில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவி லுக்கு இரவு 8.10 மணிக்கு வருகிறது. ஆரல்வாய்மொழி, தோவாளை ரெயில் நிலை யங்களில் இந்த ரெயில் நிற் காமல் செல்வதால், மேற் கூறியபடி பணிக்கு சென்ற வர்கள் இந்த ரெயில் நிலை யங்களில் இறங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் எந்த வசதிகளும் செய்யாமல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்குரிய கட்டணம் இந்த ரெயிலில் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலை பயணிகளுக்கு வருத் தத்தை ஏற்படுத்துகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ரெயில் தோவாளை மற்றும் ஆரல் வாய்மொழி ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    ×